காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பெண்ணாடத்தில் வீட்டின் வராண்டாவில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

News image

தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 12:08 am IST

பெண்ணாடம் அருகே வீட்டின் வராண்டாவில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 போ் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள மேல் இருளம்பட்டு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இந்திரா (56). கணவரை இழந்த இவா், திருமணமாகாத தனது மூத்த மகன் காசிநாதனுடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டின் வராண்டாவில் இந்திரா தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, யாரோ தனது காலை இழுப்பதுபோல் உணா்ந்து கண் விழித்தபோது, 3 அடையாளம் தெரியாத நபா்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த இந்திரா கூச்சலிட்டாா். அவரது சப்தம் கேட்டு மகன் காசிநாதன் மற்றும் அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அடையாளம் தெரியாத நபா்களை விரட்டிச் சென்றனா். இருப்பினும், அவா்கள் இருளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.