ஏற்காட்டில் மனுநீதி திட்ட முகாம்

ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி நல்லூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் சுமதி தலைமை
Updated on
1 min read

ஏற்காடு வெள்ளக்கடை ஊராட்சி நல்லூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு  வட்டாட்சியர் சுமதி தலைமை வகித்தார். வட்ட  வளங்கள் அலுவலர் தேவி,  வருவாய் அலுவலர் பிரகாஷ்  முன்னிலை வகித்தார். 
பொதுமக்களிடமிருந்து 11 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில்  நில சிட்டா, அடங்கல் மற்றும் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்ட இடம் வேண்டி பொது மக்கள் மனுக்கள் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com