/

ஈச்சம்பட்டி தனியார் பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டம்

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம்  பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி  கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம்

Updated On :5 நவம்பர் 2018, 8:39 am IST

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம்  பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி  கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி மதுரம் குழந்தைகள் காப்பக இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்,  பரிசுகள் வழங்கினர்.
மேலும் குழந்தைகளுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அக்குழந்தைகளுடன் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் டி.மாசிலாமணி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கனகராஜன், துணைத் தலைவர் சுசிலா ராஜமாணிக்கம்,பொருளாளர் குமரேசன், இயக்குநர்கள் மதியழகன், மணி, ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.