காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், பொது இடங்களிலும் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா விஜயகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பேரூராட்சிப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


