இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்: பேரூராட்சி அறிவிப்பு

காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று

Updated On :5 நவம்பர் 2018, 8:43 am IST

காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று இடங்கணசாலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட காடையாம்பட்டி ஏரி மற்றும் நீர் நிலைகளில் இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இறைச்சிக் கடைகளின் கழிவுப் பொருள்களை ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், பொது இடங்களிலும் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.  தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா விஜயகணேசன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பேரூராட்சிப் பகுதியில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.