மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேட்டூர் அணை நிரம்பியதும் உபரிநீரை வெளியேற்ற அணையின் இடதுகரையில் உபரிநீர் போக்கி எனப்படும் 16 கண்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே சங்கிலி முனியப்பன் கோயில் பகுதியில் காவிரி டெல்டா பாசனக் கால்வாயில் கலக்கிறது. இந்த உபரிநீர் போக்கியின் இரு கரைகளிலும் தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டன. இதனால் மேட்டூர் அணை நிரம்பும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்து நிவாரணம் வழங்கி வந்தது. தற்போது அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேட்டூர் பொதுப்பணித் துறை சார்பில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டுவதற்கு பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சென்றபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளாக 97 வீடுகள் கண்டறியப்பட்டு 21 நாள்களில் அப்புறப்படுத்தும்படி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே அரங்கேறியதா? வன்னி அரசு கேள்வி!

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
