எடப்பாடி டெக்ஸ் சிட்டி அரிமா சங்கம் சார்பில் ஆயுஷ் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு, உதவி மருத்துவ அலுவலர் ராமு தலைமை வகித்தார். அரிமா சங்கச் செயலர் ஏ.மகாவிஷ்ணு வரவேற்றுப் பேசினார். சித்தா, யுனானி உள்ளிட்ட பல்வேறு இந்திய மருத்துவ முறைகள் இணைந்த அரசு
ஆயுஷ் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் எடப்பாடி சுற்றுப்பகுதியைச் சார்ந்த 500-க்கும்மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். மருத்துவர் கண்ணன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். எடப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர்.மோகன், அரிமா சங்கத் தலைவர் மனோகரன், ரிலையன்ஸ் நிர்வாக மேலாளர்
எம்.சதீஷ்குமார், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைது!

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


