சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வீர வணக்க நாள் அஞ்சலி

சேலம்  ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:41 am

சேலம்  ஆயுதப்படை மைதானத்தில் பணியின்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காவல்துறை, ராணுவம் மற்றும் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதி வீர வணக்க நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. 
 நடப்பாண்டில் அனைத்து பாதுகாப்புத் துறைகளிலும் பணியின்போது வீர மரணம்  அடைந்த 414 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சேலம் மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 126 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகரக் காவல் ஆணையர் கே.சங்கர், சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) கார்த்திகேயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோ.ஜார்ஜ்,  துணை ஆணையர் தங்கதுரை மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். மேலும், பணியின் போது உயிர் தியாகம் செய்தோரின் குடும்பத்தினர்  நேரில் அழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.