தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிறையில் அடைப்பு

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:54 am

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.
 சேலம் மூன்று சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியர் சதீஷ் என்பவரை சிறுமியின் பெற்றோர் கடுமையாகத் தாக்கினர்.
 மேலும், அந்த ஆசிரியரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.
 இதுதொடர்பாக போலீஸார், பள்ளி நிர்வாகத்திடமும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
 இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
 பின்னர் அவரை சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3 இல் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.