புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிறையில் அடைப்பு

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:54 am

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.
 சேலம் மூன்று சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியில் பணியாற்றி வந்த கணித ஆசிரியர் சதீஷ் என்பவரை சிறுமியின் பெற்றோர் கடுமையாகத் தாக்கினர்.
 மேலும், அந்த ஆசிரியரை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர்.
 இதுதொடர்பாக போலீஸார், பள்ளி நிர்வாகத்திடமும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
 இதையடுத்து ஆசிரியர் சதீஷ் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.
 பின்னர் அவரை சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3 இல் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.