சேலத்தில் அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டி சேலத்தில் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை (ஜன. 24) காலை 9 மணி அளவில் நடை
பெறுகிறது.
புத்தாக்க அறிவியல் விருதுபெற்ற மாணவ, மாணவியர் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்து காட்சிப்படுத்தி, செயல்படுத்தி காண்பிக்க உள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களில் இருந்து மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பார்வையிட உள்ளார். இக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள படைப்புகள் மாநில அளவிலான கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







