முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக இம்மாத இறுதியில் தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்! சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பிரசார பயணம்    

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.

Updated On :23 ஜனவரி 2019, 8:45 am IST

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார பயணத்தை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை நாடகம் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசார பயணம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
இந்த விழிப்புணர்வு பிரசார பயணத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.1 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம்  வரை கல்வி உதவித்தொகை, பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம்  முதல் ரூ.6 ஆயிரம் வரையிலான வாசிப்பாளர் உதவித்தொகை, 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1 ஆயிரத்து 500 பராமரிப்பு உதவித்தொகை, பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25 ஆயிரம்  மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பயணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களைப் பற்றி மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் எளிதில் அறியும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் தங்களுக்கு அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எளிதில் அறிய முடியும்.  மேலும், தெருமுனை நாடக நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  தொடங்கி வைக்கப்பட்டு, சேலம் பழைய பேருந்து நிலையம்,  எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும்,  வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையும் நடைபெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.