பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலைத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
இதுதொடர்பாக அதன் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 105 கல்லூரிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை ஜூன் 15-ந்தேதி வெளியிடப்படுகிறது. இளநிலை, முதுநிலை மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாகவும், தாங்கள் பயின்ற கல்லூரிகளிலும் தெரிந்து கொள்ளலாம். மேலும், அவர்களின் செல்லிடப்பேசிக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
மறுகூட்டல்,விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு பெற விரும்புவோர் தேவைக்கேற்ப தாங்கள் பயிலும் கல்லூரியில் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டலுக்கு ரூ.300-ம்,விடைத்தாள் நகல் பெற ரூ.300-ம்,மறுமதிப்பீட்டிற்கு இளநிலை பாடப்பிரிவிற்கு ரூ.350-ம், முதுநிலை பாடப்பிரிவுக்கு ரூ.450-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய செய்திகள் ஜூலை 22 - நேரலை!

நீட் தேர்வு ரத்தே நிரந்த தீர்வு: மு.க.ஸ்டாலின்

கட்டபொம்மனைவிட வெள்ளையர்களை எதிர்த்தது மருதுபாண்டியரே! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 5






