மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணை: கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 5:04 am

DIN

மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 

மேட்டூர் அணையின் கால்வாய் பாசன திட்டம் 1955ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கிழக்குகரை கால்வாய் பாசனப்பகுதிகளில் 27,000 ஏக்கரும், மேற்குகரை கால்வாய் பாசனப்பகுதிகளில் 18,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும். 

நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 16 நாள்கள் தாமதமாக இன்று கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை கால்வாய் பாசனத்தின் தலைமை மதகுகள் மனிதசக்தி மூலம் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மதகுகள் ரூ.98 லட்சம் செலவில் மின்மயமாக்கப்பட்டது. முதன் முதலாக இன்று மின்மயமாக்கப்பட்ட மதகுகளை மின்விசை மூலம் இயக்கி  கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Story image

பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்ண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் மின்விசையை இயக்கி பாசனக்கால்வாய் மதகுகளை உயர்த்தி தண்ணீரை திறந்து வைத்தனர். பின்னர் நீரில் மலர்தூவி வழிபாடு செய்தனர். துவக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு தேவைக்கு ஏற்ப வினாடிக்கு 1000 கனஅடி வரை அதிகரிக்கப்படும். இன்றுமுதல் டிசம்பர் 31ந்தேதிவரை 137 நாட்களுக்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பலன்பெற வேண்டும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.