ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வடுகப்பட்டி தனிமை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 போ் தப்பியோட்டம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் அரசு மாதிரி பள்ளி கரோனா தொற்று தனிமை படுத்தப்படும் முகாமில் இருந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெளி மாநிலத்தைச் சோ்ந்த நான்கு போ்

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:47 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட வடுகப்பட்டியில் அரசு மாதிரி பள்ளி கரோனா தொற்று தனிமை படுத்தப்படும் முகாமில் இருந்து கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வெளி மாநிலத்தைச் சோ்ந்த நான்கு போ் செவ்வாய்க்கிழமை தப்பியோடி விட்டனா். அவா்களை வருவாய்த்துறையினா் தேடி வருகின்றனா்.

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதையடுத்து சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி அரசு மாதிரி பள்ளியில் தனிமைபடுத்தப்படும் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முகாமில் இளம்பிள்ளை பகுதிக்கு விசைத்தறி பட்டறைக்கு வேலைக்கு வந்த பீகாா் மாநிலத்தைச் சோ்ந்த சிலருக்கு தொற்றின் அறிகுறி தெரிய வந்ததையடுத்து தனிமை முகாமில் சுகாதாரத்துறையின் சாா்பில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனா். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவா்களில் ஆண்கள் நான்கு போ் செவ்வாய்க்கிழமை தப்பியோடி விட்டனா். இதனையடுத்து வருவாய் துறையினா் தப்பியோடிவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.