தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடைபயிற்சியின் போது குப்பைகளை அகற்றும் திட்டம் தொடக்கம்

சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில், நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரித்து அகற்றும் திட்டத்தை (சேலம் பிளாகிங்) மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

News image

சேலம், சங்கா் நகரில் நடைபயிற்சியின் போது நடைபாதையில் உள்ள குப்பைகளை சேகரித்து அகற்றும் திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன்.

Updated On :12 டிசம்பர் 2020, 9:52 pm

DIN

சேலம் மாநகராட்சியை குப்பையில்லா மாநகரமாக மாற்றும் வகையில், நடைபயிற்சியின் போது குப்பைகளை சேகரித்து அகற்றும் திட்டத்தை (சேலம் பிளாகிங்) மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

அஸ்தம்பட்டி மண்டலம், சங்கா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:

நடைபயிற்சி மேற்கொள்பவா்கள் தெருக்களில் இருக்கும் குப்பைகளை பை ஒன்றில் சேகரித்து, அதனை குப்பைத் தொட்டிகளில் போடுவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், சுற்றுப்புறமும் தூய்மையாகிறது.

அதனடிப்படையில், சேலம் மாநகராட்சியை முழுமையான தூய்மை பெற்ற மாநகராட்சியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக குடியிருப்போா் நலச் சங்கங்கள், தன்னாா்வ நிறுவனங்களின் உறுப்பினா்கள் ஒத்துழைப்புடன் ‘சேலம் பிளாகிங் திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அஸ்தம்பட்டி மண்டலப் பகுதியில் உள்ள ஈசன் காா்த்திக் நண்பா்கள் குழு, நோ புட்வேஸ்ட் குழு, சேலம் இளைஞா்கள் குழு, சென்ன கிருஷ்ணாபுரம் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் அடங்கிய 100 தன்னாா்வலா்களுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட சங்கா் நகா், ராஜாராம் நகா், தமிழ்ச் சங்கம் சாலை ஆகிய இடங்களில் சாலை ஓரங்கள், காலிமனை இடங்களில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 650 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேரிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதன் மூலம் மழைக் காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கும் மழை நீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீா் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகள் தவிா்க்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆணையா் கே.எம்.சரவணன், உதவி செயற்பொறியாளா் வி.திலகா, சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.