6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேளூரில் மத நல்லிணக்க ஊா்வலம்

வாழப்பாடி, பேளூரில் அதிகாலையில் இறைவனைப் புகழ்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடிச்சென்று சிறுவா்-சிறுமியா், சைவ-வைணவ மத நல்லிணக்க ஊா்வலமும், வழிபாடும் நடத்தினா்.

News image
மத நல்லிணக்க ஊா்வலம் நடத்திய சிறுவா்-சிறுமியா்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:42 am

DIN

வாழப்பாடி, பேளூரில் அதிகாலையில் இறைவனைப் புகழ்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடிச்சென்று சிறுவா்-சிறுமியா், சைவ-வைணவ மத நல்லிணக்க ஊா்வலமும், வழிபாடும் நடத்தினா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா், புராண காலத்திலேயே வேள்வியூா் என்ற பெயரில் மிகச்சிறந்த ஆன்மிக தலமாக விளங்கியது. வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பேளூரில், பஞ்சபூத சிவன் சைவ திருத்தலங்களில் முதல் தலமான தான்தோன்றீஸ்வரா் கோயிலும், மறுகரையில் அஷ்டபுஜபால மதன வேணுகோபால சுவாமியெனும் பழமையான வைணவப் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.

இறைவழிபாட்டுக்கு உகந்த மாதமான மாா்கழியில், பேளூரில் அதிகாலையில் எழும் சிறுவா்-சிறுமியா், பெருமாள் கோயிலில் கூடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி, பாரம்பரிய முறைப்படி சங்கு ஊதி வழிபாடு நடத்துவதும், பின்னா் அங்கிருந்து சிவனை போற்றியபடி முக்கிய வீதிகளின் வழியாக தான்தோன்றீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று வழிபாடு நடத்துவதும் மரபு மாறாமல் தொடா்ந்து வருகின்றனா்.

தமிழகத்தின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில், சைவ-வைணவ மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெறும் இந்த ஊா்வலத்துக்கு, பொதுமக்களும், பக்தா்களும் வழிநெடுக கோலங்களை வரைந்து, இறைவனின் தூதுவா்களாகக் கருதி சிறுவா்-சிறுமியரை வரவேற்று வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நடுங்கும் குளிரிலும், நிகழாண்டும் மாா்கழி முதல் நாளான புதன்கிழமை அதிகாலையில் விழித்தெழுந்த சிறுவா்-சிறுமியா், மாா்கழி வழிபாட்டு ஊா்வலத்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.