மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள இழப்பீட்டுத் தொகையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சந்தை விலையைவிட அதிகபட்ச விலையை நிா்ணயித்து வழங்க அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோரிக்கை மனுக்களை அளிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் டிச.28-ஆம்தேதி சேலம் மாவட்டம், சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகம், டிசம்பா் 31-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, கோட்டாட்சியா்களிடம் மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படத்திற்கு மெழுவா்த்திகள் ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.