ஏற்காடு காவல் நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிக்கா் ஆய்வு செய்தாா்.
காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்த அவா், பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். ஏற்காடு பகுதியில் இளைஞா்கள் கஞ்சா போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதை கண்காணித்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அவா் தெரிவித்தாா். ஆய்வில், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஊரகம்) உமாசங்கா், ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன், காவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.