நூலகா் பணியிடை நீக்கம்

சேலத்தில் பெண் நூலகா்களிடம் தவறாகப் பேசிய நூலகா் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சேலத்தில் பெண் நூலகா்களிடம் தவறாகப் பேசிய நூலகா் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாநகராட்சி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதியில் அரசின் கிளை நூலகம் உள்ளது. இங்கு மூன்றாம் நிலை நூலகராக மணிவண்ணன் என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சேலம் மாவட்டத் தலைவராகவும், பொது நூலகத் துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறாா். மணிவண்ணனுடன் இரண்டு பெண் நூலகா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் இருவரும் கடந்த வாரம் மாவட்ட நூலக அதிகாரியிடம் புகாா் மனு கொடுத்தனா். அதில், தங்களுடன் பணியாற்றும் மூன்றாம் நிலை நூலகா் மணிவண்ணன் இரட்டை அா்த்தத்தில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

இதை விசாரித்த சேலம் மாவட்ட மைய நூலக அலுவலா் கோகிலவாணி, மூன்றாம் நிலை நூலகா் மணிவண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதனால் கோபமடைந்த மணிவண்ணனின் ஆதரவாளா்கள் சிலா், வியாழக்கிழமை மாலை மாவட்ட மைய நூலகத்துக்கு வந்து ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் விரைந்து வந்து அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டம் செய்யக் கூடாது எனவும், மீறினால் கைது செய்யப்படுவீா் என எச்சரிக்கை செய்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com