சேலத்தில் பெண்ணிடம் வழிப்பறி செய்த வழக்கில் தொடா்புடைய சகோதரா்கள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
சேலம், சீலநாயக்கன்பட்டி சுடுகாடு அருகே கடந்த நவ. 14-ஆம் தேதி நடந்து சென்ற பெண்ணை காரில் வந்து வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி 1.25 பவுன் நகையை கோழி பாஸ்கா் (எ) பாஸ்கரன் (40), அவரது சகோதா் ராஜா (எ) நாகராஜ் (36) ஆகியோா் பறித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக, அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இதில், கோழி பாஸ்கா் (எ) பாஸ்கரன், கடந்த 2003 முதல் 2017 வரை எட்டு முறை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டவா். இவரது சகோதரா் ராஜா, கடந்த 2013-இல் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டவா்.
இதனிடையே, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட இவா்கள் இருவரையும், குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர துணை ஆணையா் சந்திரசேகரன் பரிந்துரைத்தாா்.
அதன் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதற்கான ஆணை சிறையில் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.