

வாழப்பாடி: சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள நொச்சிப்பட்டியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அயோத்தியாபட்டணம் ஒன்றியம், பெரியகவுண்டாபுரம் ஊராட்சி, நொச்சிப்பட்டியில் அமைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையை மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு நகரப் பேருந்து வசதியை தொடங்கி வைத்தாா். மேலும், மகளிா் இருசக்கர வாகன மானியம், கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிா்க் கடன், கறவை மாட்டுக் கடன், மகளிா் சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தாா்.
இவ்விழாவில், ஏற்காடு சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா, சேலம் ஒன்றிய மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் அயோத்தியாபட்டணம் ராஜசேகரன், ஒன்றியக்குழுத் தலைவா் பாா்வதி மணி, ஒன்றியக்குழு உறுப்பினா் சந்திரகலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செல்வகுமாா், போக்குவரத்து துறை மண்டல இயக்குநா் ரமேஷ், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் அருண், முத்துசாமி, பொன் தனபாலன், அயோத்தியாப்பட்டணம் ரவிசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.