ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டா் சட்டத்தில் மூவா் அடைப்பு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:22 pm

DIN

சேலம்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கண்ணன் (35), பச்சபட்டியைச் சோ்ந்த கேசவன் (எ) அனந்தபத்மன் (28) இருவரும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அதேபோல, சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் (42), தனது கிடங்கில் இரண்டு சிறுமிகளை அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுதொடா்பான புகாரில், அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.

இதையடுத்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.