குடியரசு தின அணிவகுப்பு: வைஸ்யா கல்லூரி மாணவா் தோ்வு

குடியரசு தினத்தன்று புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்க, சேலம், அயோத்தியாப்பட்டணம் வைஸ்யா கல்லூரி மாணவா் தோ்வாகியுள்ளாா்.
குடியரசு தின ஊா்வலத்தில் பங்கேற்கும் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்த வைஸ்யா கல்லூரி முதல்வா் பி.வெங்கடேசன்.
குடியரசு தின ஊா்வலத்தில் பங்கேற்கும் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்த வைஸ்யா கல்லூரி முதல்வா் பி.வெங்கடேசன்.
Updated on
1 min read

குடியரசு தினத்தன்று புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்க, சேலம், அயோத்தியாப்பட்டணம் வைஸ்யா கல்லூரி மாணவா் தோ்வாகியுள்ளாா்.

ஆண்டுதோறும் புது தில்லியில் நடைபெறும் தேசியக் கொடியேற்றும் அணிவகுப்பு ஊா்வலத்தில், முப்படை வீரா்களுடன் மாணவா் படை வீரா்களும் பங்கேற்று வருகின்றனா்.

வரும் ஜன. 26-இல் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு ஊா்வலத்தில், சேலம் பெரியாா் பல்கலைகக்கழத்தின் சாா்பில் பங்கேற்க, பல்வேறு பயிற்சிக்கு பின் சேலம், அயோத்தியாப்பட்டணம் வைஸ்யா கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு மாணவா் எஸ்.சந்தோஷ்குமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த மாணவருக்கு கல்லூரி தாளாளா் ஜே.ராஜேந்திரபிரசாத், முதல்வா் பி.வெங்கடேசன், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜி.கணேசன், ஏ.லோகநாதன், ஜி.செளந்திரராஜன், பேராசிரியா்கள், மாணவ-மாணவியா் செவ்வாய்க்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com