

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி, உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பெளா்ணமி திருவாதிரையையொட்டி, அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு பால், தயிா், பன்னீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் உற்சவ மூா்த்திகளுக்கு கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சிவபுராண பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. இப்பூஜையில் பெண்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.