சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் சார்பில் சங்ககிரி பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், பாளையங்கோட்டை ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை மாத்திரைகளை பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், தூய்மைபணியாளர்கள் 100 பேருக்கு வழங்கினார்.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் மாத்திரைகளின் நன்மைகள் குறித்து தூய்மை பணியாளர்களிடத்தில் விளக்கிப் பேசினார்.
பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ், டிரஸ்ட் துணைத்தலைவர் எம்.பாலகிருஷ்ணன், செயலர் ஆர்.ராகவன், நிர்வாகிகள் எஸ்.கணேஷ், பொறியாளர் வேல்முருகன், பெஸ்ட் கோபால் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



