இதுகுறித்து வாழப்பாடி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் கண்ணன், செயலாளர் செயலாளர் சுரேஷ் ஆகியோர் கூறியதாவது:
வாழப்பாடி பகுதியில், பேருந்துகளை அதிக ளவில் பயன்படுத்த விரும்பாத கிராமப்புற மக்கள், ஷேர் ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டுனர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயணிகள் நலன் கருதியும், கரோனா பரவலை தடுப்பதற்கு சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏழு நாள்களுக்கு ஆட்டோக்களை இயக்குவதில்லை என முடிவெடுத்துள்ளோம் என்றனர்.