பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.
ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 22 வகுப்பறைகள் விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை துவங்க உள்ளது. இதனையடுத்து ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் என்.ஸ்ரீதேவி மற்றும் ஆத்தூர் தீயணைப்பு அலுவலர் பெ.சேகர் தலைமையில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை துவக்கி வைத்தனர்.
தினமும் விடைத்தாள் திருத்தும் முன்பும் பின்பும் தெளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.