ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
Updated On :19 மார்ச் 2026, 10:30 am

இணையதளச் செய்திப் பிரிவு

கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால், ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயல் மீது புதன்கிழமை (மார்ச் 18) இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு மையத்தின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய்க் கப்பல்கள் பயணிக்க முடியாமல் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் ஈரானில் உள்ள சௌத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதுமாகத் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Trump has warned that the world's largest gas field in Iran will be destroyed if attack on Qatar continues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.