47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து அலுவலகம் முற்றுகை:300 தொழிலாளா்கள் கைது

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:58 pm

DIN

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி போக்குவரத்து கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும், 14 ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்திட வேண்டும், 15 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு பண பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், சேலம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தொமுச பொதுச் செயலாளா் மணி, தலைவா் மோகன்ராஜ், சிஐடியு பொதுச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை ஆணையா் சந்திரசேகரன், உதவி ஆணையா்கள் ஆனந்தகுமாா், கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.