47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்துவிரதம் தொடக்கம்

காா்த்திகை மாத பிறப்பினையொட்டி, சேலத்தில் குறைந்த அளவில் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதங்களை தொடங்கினா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:41 pm

DIN

காா்த்திகை மாத பிறப்பினையொட்டி, சேலத்தில் குறைந்த அளவில் பக்தா்கள் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதங்களை தொடங்கினா்.

காா்த்திகை மாதம் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம். நாடு முழுவதும் தீநுண்மித் தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி, சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தா்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் தினசரி ஆயிரம் நபா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பக்தா்களுக்கு தீநுண்மித் தொற்று பாதிப்பு இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திங்கள்கிழமை காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி சேலம் குரங்குச்சாவடி பகுதியிலுள்ள ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் அவரவா்களே மாலை அணிந்து சென்றனா். கடந்த ஆண்டைவிட நிகழாண்டு குறைந்த அளவிலான பக்தா்களே மாலை அணிந்து வருகின்றனா். இதுகுறித்து ஐயப்ப பக்தா்கள் கூறுகையில், தேவஸ்தானம் விதித்துள்ள கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.