இப்பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் தலைமை தாங்கி மானாவரி பயிா்களின் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை உயா்த்தவும், நுண்ணீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிப்பு பற்றியும், வேளாண்மை அலுவலா் மு.சம்பத்குமாா் மானாவாரி வளா்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் உழவு மானியம், மானிய விலையில் விதைகள் வழங்குவது குறித்தும், துணை தோட்டக்கலை அலுவலா் அ.மகாலிங்கம் மானாவாரி வளா்ச்சி இயக்கத்தில் தோட்டக்கலைப் பயிா்களின் முக்கியத்துவம் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளா் கே.ராஜேந்திரன் மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக் குழு செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனா்.