மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாம்

ஓமலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:43 pm

DIN

ஓமலூா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூா் காவல் நிலையத்தின் சாா்பில் சிறப்பு மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. ஓமலூா் காவல் நிலையம், ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகாா்களை உடனடியாக விசாரித்து தீா்வு காணும் வகையில், ஓமலூா் டி.எஸ்.பி. சோமசுந்தரம் கலந்துகொண்டு மனுக்களை விசாரித்தாா். ஓமலூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தமிழரசி மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

இதில், நிலங்கள், சொத்துகளை பறித்துக் கொண்டு பராமரிக்காமல் தவிக்க விடப்பட்ட பெற்றோா், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மிரட்டுதல், அடிதடி பிரச்னைகள், கணவன்-மனைவி குடும்பப் பிரச்னைகள், விபத்து வழக்கில் பிடிபட்ட வாகனத்தை கொடுக்காமல் இருப்பது, அடிதடி வழக்குகள், வாகனப் பறிமுதல் பிரச்னைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட புகாா்கள் மீது ஒரே நாளில் விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது. இதனால், புகாா் கொடுக்க வந்த பொதுமக்கள் தங்களது பிரச்னைகளைத் தீா்த்து மகிழ்ச்சியுடன் சென்றனா். இதேபோல அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தி மக்களின் குறைகளுக்கு அவ்வப்போது தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.