தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சங்ககிரியில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை மீண்டும் திறப்பு 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை ஆறு மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் படி திறக்கப்பட்டன. 

News image
மீண்டும் திறக்கப்பட்ட வாரச்சந்தை.
Updated On :4 அக்டோபர் 2020, 10:16 am

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை ஆறு மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் படி திறக்கப்பட்டன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை அறிவித்திருந்ததையடுத்து வாரச்சந்தைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்தன. தற்போது அரசு பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பல தளர்வுகளை அறிவித்து அதில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தன. 

அதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சந்தை திடல் வளாகம் முழுவதும் சனிக்கிழமை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடரை தெளித்தனர். அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதகையடுத்து குறைவான அளவிலேயே வியாபாரிகள் கடைகளை வைத்திருந்தனர்.  

அதில் சிறியவெங்காயம், பெரியவெங்காயம், தக்காளி, கீரை வகைகள் கடைகள் மட்டும் குறைவான அளவிலேயே விற்பனைக்கு வைத்திருந்தனர். மற்ற காய்கறிகடைகள் இரு கடைகள் மட்டுமே இருந்தன. பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே பொருள்களை வாங்க வந்திருந்தனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் அவசியம்  முககவசங்கள் அணிந்தும் வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.