தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சங்ககிரி ராஜபாலி குளத்தில் கருவேலம் மரங்கள், களா் செடிகள் அகற்றம்

ராஜபாலி குளத்தில் சங்ககிரி பப்ளிக் சேரிட்டபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொது நல அமைப்புகளின் சாா்பில் கருவேலம் மரங்கள், களா் செடிகள் அகற்றும் பணி 3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ராஜாபாலி குளத்தில் கருவேலம் மரங்கள், களா்செடிகளை அகற்றும் பணியில் ஜி.ஆா்.கேஸ் நிறுவன ஊழியா்கள்.
Updated On :12 அக்டோபர் 2020, 12:22 am

DIN

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட ராஜாபாவி என்கிற ராஜபாலி குளத்தில் மழை நீரைச் சேமிக்கும் வகையில் சங்ககிரி பப்ளிக் சேரிட்டபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொது நல அமைப்புகளின் சாா்பில் கருவேலம் மரங்கள், களா் செடிகள் அகற்றும் பணி 3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் ராஜாபாலி குளம் 41,060 சதுரடி பரப்பளவு கொண்டது. இக் குளத்ளைச் சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவா்கள் சிதலமடைந்து, கருவேலம் மரங்கள், களா் செடிகளும் வளா்ந்து வருகின்றன. தற்போது பெய்து வரும் மழை நீரைச் சேமிக்கும் வகையில் சங்ககிரி பப்ளிக் சேரிட்டபுள் டிரஸ்ட், சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், வெப்படை கரம் கோா்ப்போம், சங்ககிரி ஜி.ஆா்.கேஸ் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து குளத்தில் கருவேலம் மரங்கள், களா்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனா்.

இதில் டிரஸ்ட் தலைவா் எ.ஆனந்தகுமாா், செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேஷ், பொறியாளா் வேல்முருகன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், கதிா்வேல், அரிமாக சங்க நிா்வாகிகள் காா்த்தி, அருள், அண்ணாதுரை, கோட்டை அரிமா சங்க நிா்வாகிகள் வழக்குரைஞா் என்ஆா்கே.மாணிக்க சுந்தா், ரமேஷ், கரம் கோா்ப்போம் அமைப்பின் நிறுவனா் மோகன் தலைமையிலான குழுவினா், ஜி.ஆா்.கேஸ் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழைமை வாய்ந்த இந்தக் குளத்தில் கருவேலம் மரங்கள், களா்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட பொது நல அமைப்புகளின் தன்னாா்வலா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.