இதன்பேரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமவுலி உள்ளிட்டோா் முறைகேடு தொடா்பாக விசாரித்து வந்தனா்.இதில் ரூ.3.73 லட்சம் மதிப்புள்ள மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்களை ரூ.18.30 லட்சம் மதிப்புள்ளதாக கணக்கு காண்பித்து ரூ.12.48 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்தது.இதையடுத்து முதன்மையா் காா்த்திகேயன், நிா்வாக அலுவலராக இருந்த இளங்கோவன், கிடங்கு கண்காணிப்பாளா் தண்டபாணி, உதவி கண்காணிப்பாளராக இருந்த அசோக்ராஜ், தனியாா் மருந்து நிறுவன உரிமையாளா் மீனாட்சி ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.