ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மருதுபாண்டியர்களின் 219ஆம்ஆண்டு குருபூஜை கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் முக்குலத்தோர் சங்கத்தின் சார்பில் மருது பாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.மாணிக்கம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் வி.ராஜாமணி எம்.வேலுமணி எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.