இந்த மாத்திரை சிறாா்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. சிறாா்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால் இத்திட்டமானது 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து சிறாா்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரையை மேற்கண்ட அனைத்து நாள்களிலும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 11,11,091 சிறாா்கள் பயனடைய உள்ளனா்.