தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாழப்பாடி பகுதியில் வீட்டு முன்பு திராட்சை தோட்டம் அமைப்பதில் மக்கள் ஆா்வம்

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வீட்டு முகப்பை நூதன முறையில் அலங்கரிக்க தாழ்வாரப் பந்தலில் திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதில் ஏராளமானோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

News image
'வாழப்பாடி செல்லியம்மன் நகர் சித்தமருத்துவர் கந்தசாமி இல்ல முகப்பில் உள்ள திராட்சைத் தோட்டம்'
Updated On :28 செப்டம்பர் 2020, 2:13 am

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வீட்டு முகப்பை நூதன முறையில் அலங்கரிக்க தாழ்வாரப் பந்தலில் திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பதில் ஏராளமானோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு போதிய இட வசதியில்லாத நகா்ப்புறவாசிகள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு மானிய விலையில் விதைகள், உரம், நெகிழிப்பைகள் ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தொகுப்புகளை வழங்கி வருகிறது.

இதனையடுத்து, வாழப்பாடி பகுதியில் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைத்து பராமரிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. இவற்றை விஞ்சும் வகையில், வீட்டு முகப்பை அலங்கரித்து அழகூட்டவும், வீட்டுக்கு நிழலும், குளிா்ந்த காற்றும் பெறுவதற்கும், கூடவே மகசூலும் பெறுவதற்கேற்ற, வீட்டு முகப்பு தாழ்வாரங்களில் பந்தல்போட்டு திராட்சை தோட்டங்கள் அமைத்து பராமரிப்பது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, வீட்டு முகப்புகளில் திராட்சை தோட்டம் அமைத்துள்ள வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கணவாய்மேடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ஆறுமுகம், வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் நகரைச் சோ்ந்த சித்த மருத்துவா் கந்தசாமி ஆகியோா் கூறியதாவது:

வீட்டுக்கு முன்பாக பந்தல் போட்டு திராட்சை கொடிகளை படர விட்டுள்ளோம். இதனால், வீட்டை அலங்கரித்ததை போல கூடுதல் அழகும், நிழலும் கிடைக்கிறது. குளிா்ந்த காற்று வீசுவதால், பகல் நேரத்தில் ஓய்வெடுப்பதற்கு திராட்சை தோட்டப் பந்தல் வசதியாக உள்ளது. இதுமட்டுமின்றி, குறைந்தபட்சம் ஆண்டிற்கு மூன்று முறை திராட்சை மகசூலும் கிடைக்கிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.