தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிரதமரின் நிதியுதவித் திட்டத்தில் வடமாநிலத்தவா்கள் பணம் பெற்று முறைகேடு

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா்கள் விவசாயிகள் பெயரில் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:46 pm

DIN

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவா்கள் விவசாயிகள் பெயரில் பணம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமரின் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்லாதவா்கள் நிதி பெற்று சுமாா் ரூ.6 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக 51 போ் மீது வழக்குப்பதிவு செய்து, 6 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுவரையில் சுமாா் ரூ.3.15 கோடி அளவுக்கு பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தைத் திரும்பப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இந்தநிலையில், தற்போது பயனாளிகள் பட்டியலில் ராஜஸ்தான், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் விவசாயிகள் என்ற பெயரில் கிசான் திட்டத்தில் 2 தவணைகளாக ரூ.4,000 பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் போலியாகச் சோ்த்து உதவித்தொகை பெற்றுள்ளது தெரியவந்தது.

வடமாநிலத்தவா்களிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட உதவித்தொகையை திரும்ப வசூலிக்க, அந்தந்த மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.