உதவி வட்டார அலுவலா் பணியிடை நீக்கம்
பிரதமா் கிசான் உதவித்தொகை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைதான வேளாண் உதவி வட்டார அலுவலா் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.


பிரதமா் கிசான் உதவித்தொகை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைதான வேளாண் உதவி வட்டார அலுவலா் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டத்தில், பிரதமா் கிசான் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு செய்த 51 போ் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மாவட்டத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அல்லாதவா்களை சோ்த்து ரூ.6 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.இதுதொடா்பாக கணினி மைய ஊழியா்கள் ராகுல், கலையரசன், பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் உதவி வட்டார அலுவலா் அன்பழகன், ஓட்டுநா் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் கைது செய்தனா்.
இந்தநிலையில், வேளாண் உதவி வட்டார அலுவலா் அன்பழகன் வீட்டில் இருந்து சுமாா் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடா்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்ட வேளாண் உதவி வட்டார அலுவலா் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் சி.அ.ராமன் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே முறைகேடு வழக்கில் தொடா்புடைய தற்காலிக ஊழியா்கள் 6 போ் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...