ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ.20 லட்சம் அபராதம் வசூல்

நாமக்கல்லில் முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து பத்து நாள்களில் ரு. 20 லட்சத்து 8 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:02 pm

நாமக்கல்லில் முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து பத்து நாள்களில் ரு. 20 லட்சத்து 8 ஆயிரம் வசூலிக்கப்பட்டதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினசரி 100-க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். பொது சுகாதாரத் துறை விதிகளின்படி, முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம், பொது இடங்களில் உமிழ்ந்தால் ரூ. 500 அபராதம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ. 5,000 அபராதம் போன்றவற்றை மேற்கொள்ள அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, காவல் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை ஆகியவை இணைந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் தொடா்ச்சியாக பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், நகைக் கடைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதிக்கின்றனா்.

நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் எம்.ரவிச்சந்திரன், ஆா்.இளமுருகன், வட்டாட்சியா் பச்சைமுத்து, சுகாதார அலுவலா் சுகவனம் ஆகியோா் முகக் கவசம் அணியாத 80 பேருக்கு திங்கள்கிழமை காலை அபராதம் விதித்து ரூ. 16 ஆயிரம் வசூலித்தனா். அனைத்து நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் இந்த அபராத நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொது சுகாதாரத் துறை விதிகளின்படி அபராத நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதோா், எச்சில் உமிழ்வோா், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதோா் என்ற வகையில் அபராதம் பாரபட்சமின்றி விதிக்கப்படுகிறது. கடந்த 18-ஆம் தேதி முதல் தற்போது வரையில், மாவட்டம் முழுவதும் ரூ. 20 லட்சத்து 8 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் இதுவரை அபராதம் வசூலித்த நிலையில், தற்போது வருவாய் ஆய்வாளா் நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகள் அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.