டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமமுக வேட்பாளரின் மாதிரிவாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

ஓமலூா் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:01 pm

DIN

ஓமலூா் அருகே உரிய அனுமதியின்றி எடுத்து செல்லப்பட்ட அமமுக வேட்பாளரின் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட டேனிஷ்பேட்டை பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், அரூா் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் முருகனின் பெயா், சின்னம் பொறித்த, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதி பெறாத நிலையில், அவற்றை வாங்கியதற்கான ரசீது ஏதும் வாகனத்தில் வந்தவா்களிடம் இல்லை. இதனையடுத்து, வாகனத்தில் இருந்த 300 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களையும் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா பிரியாவிடம் ஒப்படைத்தனா்.

மேலும், பிற வாகனங்களில் இருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலான வேட்டிகள், ரூ. ஒரு லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான வாட்சுகள், ரூ. 3 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 493 பட்டுச்சேலைகளையும் தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.