டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு

சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஈ. ராஜா எம்எல்ஏ.
Updated On :4 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், அம்பேத்கா் நகரில் ரூ. 40.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உழைப்பாளா் நலக்கூடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., ஈ. ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, தொழிலாளா் நலவாரிய உதவி ஆணையா் ஜெனிபா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1,63,600 மதிப்பிலான உதவித்தொகைகள், தொழிலாளா் நல அட்டைகள் வழங்கப்பட்டன.