நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்ககிரியில் 314 மதுப்புட்டிகள் பறிமுதல்

சங்ககிரியில் அனுமதியில்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 314 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சங்ககிரியில் அனுமதியில்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 314 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா், சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சோதனை நடத்தினா். அதில் சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மகன் ராஜகோபால் (57) என்பவா் அரசின் உரிய அனுமதியில்லாமல் 293 மதுப் புட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவரிடமிருந்து மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸாரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

இதேபோல தோ்தல் பறக்கும் படையேச் சோ்ந்த ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினா் சங்ககிரியை அடுத்த வரதங்காட்டானூா் பகுதியில் சோதனை நடத்தினா். அதில் ஒலக்கசின்னானூா் பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் (40) அரசின் உரிய அனுமதியில்லாமல் 21 மதுப் புட்டிகளை விற்பனைக்கு வைத்திருந்தைக் கண்டுபிடித்து அவரை சங்ககிரி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சங்ககிரி போலீஸாா் மொத்தம் 314 மதுப்புட்டிகளை பறிமுதல் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.