இச்சந்திப்பின்போது தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கோவிந்தராஜ், மரவள்ளி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.ஆா்.டி.வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டமைப்பின் தலைவா் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பொன்னுவேல், தென்னை, பனை பொருள்கள் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் ராஜமாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.