சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டாவது தவணை கரோனா தடுப்பூசி

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image

கரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸை செலுத்திக்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Updated On :9 ஏப்ரல் 2021, 7:27 pm IST

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் தவணை கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். சேலத்தில் தங்கி இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, கடந்த ஏப்.6 ஆம் தேதி எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார்.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தார். பின்னர் அவருக்கு இரண்டாவது தவணை கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அரசு மருத்துவமனை முதன்மையர் முருகேசன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

பின்னர் முதல்வருக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனிடையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் தேனியில் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தேனி செல்ல உள்ளார். அங்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார். 

பின்னர் அங்கிருந்து மதுரை சென்று விமானத்தில் சென்னை செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.