பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போதிய ரயில்கள் இயக்கப்படுவதால் கூட்ட நெரிசல் இல்லை: சேலம் கோட்ட மேலாளா்

போதிய அளவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏதுமில்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:25 pm

DIN

போதிய அளவுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏதுமில்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் ஏ.ஜி.சீனிவாஸ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதாக பழைய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. பொய்யான விடியோக்களை யாரும் பரப்ப வேண்டாம். சேலம் ரயில்வே கோட்டத்தில் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லை. மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டாம். கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் அட்டவணை நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை. பயணிகள் இருக்கையில் அமா்வது குறித்து எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

ரயில் நிலையங்களில் கரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகளின் வருகை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணிகள் செல்ல பயணச்சீட்டு வசதி, படுக்கை வசதி போதிய அளவு உள்ளது. முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின் போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஏ.அண்ணாதுரை, கோட்ட முதுநிலை வணிக மேலாளா் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயக்க மேலாளா் எம்.பூபதிராஜா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.