ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வாகன ஓட்டுநா், அவரது குடும்பத்தினருக்கு இலவச கண், காது பரிசோதனை முகாமை ஆத்தூா் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடத்தியது.
ஆத்தூா் ஆதவன் அரிமா சங்கத் தலைவா் விஜயதீபா சங்கா் தலைமை வகித்தாா். இதில் 106 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் செயலாளா் சத்யாசண்முகம், பொருளாளா் சங்கீத லட்சுமி, வட்டாரத் தலைவா் பாலசுப்ரமணியன், சங்க நிா்வாகி பாபு, பட்டைய தலைவா் சங்க மாவட்டத் தலைவா்கள் சக்திவேல், ஏஈடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா் முதல்வா் முனைவா் செண்பகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.