நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயான பாதை வேண்டி மக்கள் சாலை மறியல்

சேலம் அருகே கருங்கல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் மயான பாதை வேண்டி ஞாயிற்றுக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் செய்தனர்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2021, 4:59 am

DIN


சேலம் அருகே கருங்கல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் மயான பாதை வேண்டி ஞாயிற்றுக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ளது கருங்கல்லூர் காந்தி நகர். இங்கு 30- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காந்தி நகரைச் சேர்ந்த குப்புசாமி (வயது 60) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயான பாதை வேண்டி மேட்டூர், மைசூர் சாலையின் குறுக்கே காந்தி நகரில் சடலத்தை வைத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Story image

தகவலறிந்த வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், வருவாய்த் துறை ஆவணங்களை சரிபார்த்து மயான பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மேட்டூர் - மைசூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.