மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

குட்கா கடத்தல்: தம்மம்பட்டியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

தம்மம்பட்டியில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பதுக்கிய வழக்கில் கைதான பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 9:01 am

DIN

தம்மம்பட்டியில், ரூ.50 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்காவை பதுக்கிய வழக்கில் கைதான பா.ஜ.க. பிரமுகர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ராஜ்மோகன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், கடந்த ஜூலை 23 ஆம் தேதி இரவு, தம்மம்பட்டி நடுவீதியில், பாஜக நகர வர்த்தக அணி செயலாளரான பிரகாஷ் என்பவருடைய கடை மற்றும் குடோன்களில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது, உடையார்பாளையம் இடுகாடு செல்லும் வழியில் தொடக்கப்பள்ளி எதிரே உள்ள நாயக்கர் தோட்டத்தில், பிரகாஷ் பதுக்கி வைத்திருந்த, 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, ஒன்றரை டன் எடையுள்ள குட்கா, பான்பராக் பாக்கெட்களை, தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டாஸ் வழக்கு பதியக்கோரி, ஆட்சியர் கார்மேகத்திற்கு, சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் பரிந்துரைத்தார். 

அதனையடுத்து, தம்மம்பட்டி பா.ஜ.க. பிரமுகர் பிரகாஷ் மீது, குண்டாஸ் வழக்குப் பதிய ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.