குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சங்ககிரி அருகே லாரியில் தீ விபத்து: காவல்துறையினர் விசாரணை 

சங்ககிரி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகன டயர்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் டயர்கள் தீயில் எரிந்தன. 

News image
தீயை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சங்ககிரி தீயணைப்பு வீரர்கள். 
Updated On :28 ஆகஸ்ட் 2021, 2:42 pm

DIN

சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சக்கொரை பகுதியில் சனிக்கிழமை இரு சக்கர வாகன டயர்கள் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் எதிர்பாராத விதமாக தீ பற்றி கொண்டதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் டயர்கள் தீயில் எரிந்தன. 

தென்காசி மாவட்டம், ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன் என்பவர் மதுரை அருகே உள்ள மேலூரிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஓசகோட்டே பகுதிக்கு கண்டெய்னர் லாரியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் இரு சக்கர வாகன டயர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டுள்ளார்.

அப்போது  சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஊஞ்சக்கொரை பகுதியில் லாரி செல்லும் போது எதிர்பாராத விதமாக லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார். அப்போது லாரியின் பின்பக்கம் தீ பற்றி புகை வந்ததையடுத்து லாரியிலிருந்த டயர்களில் சிலவற்றை கீழே தள்ளி விட்டு சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து சென்ற சங்ககிரி தீயணைப்பு நிலைய வீரர்கள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க தீயணைப்பு வாகனம் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் திடீரென தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.